வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 (நேற்று) முதல் வரும் 14ம் தேதி வரை 16 சிறப்பு விமானங்களை இயக்குகிறது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நாளை 3ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.45 மணிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 188 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
அதே போல் சென்னைக்கு வரும் 6ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.40 மணிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது.
மேலும் வரும் 9, 11, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மீட்பு விமானத்திலும் சுமார் 160ல் இருந்து 180 பயணிகள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
#VandeBharatMission Phase4 Schedule of flts from Singapore as of now & current Guidelines.
Flts to Delhi, Kolkata,Mumbai added.
Selected pax wil hear from Mission/Airlines for ticketing.
Please check website for updates & requirements.
GoI wil schedule more flts in coming days. pic.twitter.com/CBnnCOgGLm— India in Singapore (@IndiainSingapor) July 1, 2020
பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தங்களால் கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்க முடியாதவர்களுக்காக, தமிழக அரசு இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளது.
விமானங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு : https://www.hcisingapore.gov.in/
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு..!