சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல், கடந்த 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்றுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 ஆதரவு மானியங்களைப் பெற ஏமாற்றிய இருவர் மீது குற்றச்சாட்டு..!
அதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்
இந்த நிலையில் சுந்தரவேல், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : GE2020: புதிய இந்திய வேட்பாளர்கள் இல்லாதது குறித்து பிரதமர் லீ மற்றும் அமைச்சர் சண்முகம் விளக்கம்..!