சிங்கப்பூரில் தொழில் முனைவராக வசிக்கும் திரு விக்னேஷ் சுந்தரேசன் சமீபத்தில் ‘எவ்ரிடேய்ஸ்: த ஃபர்ஸ்ட் 5,000 டேய்ஸ் ‘ என்னும் அரியவகை கலைப்படைப்பை $69 மில்லியன் (S$93 மில்லியன்) மின்னிலக்க நாணயத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
‘பீபல்’ என்னும் மைக் விங்கிள்மன் என்ற கலைஞரால் படைக்கப்பட்ட மெருகூட்டியது போன்ற மெய்நிகர் புகைப்பட தொகுப்பை மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற கிறிஸ்டீ’ஸ் ஏலத்தில் மெட்டாகோவன் என்பவர் ஏலத்தில் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
“வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்புவது குறையலாம்”
அந்த மெட்டாகோவன் என்பது விக்னேஷ் சுந்தரேசன்தான் என்று ‘சப்ஸ்டேக்’ இணையதளத்தில் அவரே தமது அடையாளத்தை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.
திரு விக்னேஷ் (வயது 32) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இவருடைய பெயரில் வீடோ காரோ இல்லை என்றும் தான் ஒரு சாதாரண மனிதன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘போர்ட்கீ டெக்னாலஜிஸ்’ என்னும் சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பணிபுரிவதாகவும், லிட்டில் இந்தியா அருகில் கொண்டோமினிய வீடு ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருவர் மீது சிறுநீர் கழித்த 6 பேர் தொடர்பான காணொளி – காவல்துறை விசாரணை
ஆனந்த் வெங்கடேஷ்வரன் என்பவரும் விக்னேஷ்ம் இணைந்து மெட்டாபர்ஸ் என்ற உலகின் பெரிய ‘என்எஃப்டி ஃபண்ட்’ நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து நாளிதழில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப ஆலோசகராக திரு விக்னேஷும் பத்திரிக்கையாளராக திரு ஆனந்தும் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முதன் முதலில் மின்னிலக்க நாணயத்தை சம்பாதிக்க 2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்தபோது அதற்க்கான வழிகளை தேடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.