குப்பைகளை வீட்டில் இருந்து வெளியே வீசுபவர்களின் கவனத்திற்கு….!

 

சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் இனி குப்பைகளை வீட்டில் இருந்து வெளியே வீசினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 01- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பகார் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து; 50 பேர் வெளியேற்றம்!

விதிமுறைகளை மீறி குப்பைகளை வெளியே வீசினால் முதல்முறை அபராதமாக 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக குப்பைகளை வெளியே வீசினால் 2,000 வெள்ளி வரையிலான அபராதமும், மூன்றுமுறை (அல்லது) அதற்கு மேல் குற்றம் செய்தால் 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

“ஜூலை முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த புதிய விதிமுறை கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், வீட்டு உரிமையாளர்களும், வாடகைத்தாரர்களும் மேலும் பொறுப்பாகச் செயல்பட இந்த புதிய நடைமுறை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.