பெடோக் சவுத் HDB குடியிருப்பின் கீழே, கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று 45 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று காலை 7:32 மணிக்கு பிளாக் 4 பெடோக் சவுத் அவென்யூ 1இல் இயற்கைக்கு மாறான இந்த மரணம் தொடர்பாக தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான திட்டம் – பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்
காவல்துறை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த பகுதியின் காணொளி டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் பேஸ்புக்கிலும் பதிவேற்றப்பட்டது.
பிளாக்கின் அடிவாரத்தில் அந்த பெண் அசைவில்லாமல் கிடந்துள்ளார். அதனை அடுத்து, அந்த பெண் உயிரிழந்ததை துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், எந்தவிதமான சதிச்செயலும் சந்தேகிக்கப்படவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!