குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்… துர்நாற்றம் வீசியதை அடுத்து கண்டெடுப்பு

Google Maps

பெடோக் நார்த் அவென்யூ 2ல், 514வது பிளாக்கில் உள்ள குடியிருப்பில் 74 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

HDB வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த அவரின் அண்டை வீட்டார் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

மதுரை, கோவையில் இருந்து “உடான்” திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டம்

இறந்தவர் பெயர் “லில்லி” என்று அறியப்படுவதாகவும், அவர் தனியாக வசித்து வந்ததாகவும் அண்டை வீட்டார் கூறியுள்ளார்.

மேலும், அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வந்ததாகவும், ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

செப். 4 அன்று மாலை 4:59 மணிக்கு, பிளாக் 514 பெடோக் நார்த் அவென்யூ 2ல் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை மதர்ஷிப்பிடம் தெரிவித்துள்ளது.

74 வயதான மூதாட்டி பிளாக்கின் குடியிருப்பில் அசைவில்லாமல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை துணை மருத்துவர் உறுதி செய்தார்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த மரணத்தில் எந்த சதி விளையாட்டும் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)