பொடுபோக்காக சாலையை கடந்த பெண்ணை மோதி தூக்கிய கார்… சாலையில் பறந்து விழுந்த பெண் (வீடியோ)

woman-jaywalking

ஆங் மோ கியோ அவெனியூ 1ல் சாலையின் குறுக்கே செல்ல முயன்ற பெண் ஒருவரை கார் மோதியது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இன்று (பிப். 21) Roads.sg என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

வீடியோ காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரப்படி, இந்த சம்பவம் நேற்று பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது.

வீடியோவில், இரண்டாவது பாதையில் நின்றுகொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையில் இருந்து ஒரு பெண் திடீரென வெளியேறுவதைக் காணலாம்.

கண் இமைக்கும் நேரத்தில், எதிரே வந்த கார் ஒன்று அந்த பெண்ணை மோதுவதையும், இதனால் அவர் சாலையில் தூக்கி வீசப்படுவதையும் காண முடிகிறது.

முடிந்தும் முடியாமலும் எழும் அந்த பெண், பின்னர் சாலையில் பறந்த தன்னுடைய உடமைகளை எடுப்பதையும் காண முடிகிறது.

சாலையில் விதிகளை மீறி நடந்து செல்வது குற்றமாகும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த இடத்திலேயே S$20 அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு 2 வாரங்களுக்கு தடை – காரணம் என்ன?