தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 82 இல் உள்ள St Hilda’s மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே வயிற்றில் தன்னைத் தானே குத்திக் கொண்டதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், 53 வயதான பெண் பொது இடத்தில் இருக்கும் போது ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள உள்ளார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை
இந்த சம்பவத்தின் போது ஜூலியானா பிண்டே அப்துல் காதிர் என்ற அந்த பெண்மணி இரண்டு கத்திகள் வைத்திருந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) அறிக்கையில் கூறியது.
அந்த கத்திகளை கொண்டு தன்னை தானே குத்திக் கொள்ளவும், மேலும் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்ளவும் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப். 21 அன்று பொது இடத்தில் இரண்டு தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், அவர் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்: பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்