Dhoby Ghaut ரயில் நிலைய தடுப்பு வேலி விளிம்பில் நின்ற பெண்

Dhoby Ghaut ரயில் நிலைய தடுப்பு வேலி விளிம்பில் நின்ற பெண்
Facebook

Dhoby Ghaut ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள தடுப்பு விளிம்பில் நின்று கொண்டிருந்த 43 வயது பெண் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

நேற்று அக்டோபர் 1, அன்று மதியம் நடந்த இந்த சம்பவத்தை கண்ட ஒருவர் அதனை படம்பிடித்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்

பின்னர், அந்த வீடியோ நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளை நிற ஆடை அணிந்த அந்த பெண்ணை, நிலைய ஊழியர் போல இருக்கும் ஒருவரும் முதியவர் ஒருவரும் தடுத்து நிறுத்தும் காட்சிகள் வீடியோவில் இருந்தன, அப்போது அந்த பெண் ​​அழுது கத்தியதையும் வீடியோவில் காண முடிந்தது.

இந்நிலையில், அந்தப் பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதை சிங்கப்பூர் போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

பின்னர், மனநல பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை