விவாகரத்து வேண்டும் என்பதற்காக கணவன் மீது கொதிநீரை ஊற்றி காயம் ஏற்படுத்திய மனைவிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாடாமிலிருந்து சிங்கப்பூர் வந்த அந்த பெண், தனது கணவரின் வீட்டிற்கு வெளியே மாறுவேடத்தில் பதுங்கி அவரை தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரது மேல் முதுகில் தீக்காயம் இரண்டாம் நிலை அளவுக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 29 வயதான ரஹீமா நிஸ்வா என்ற இந்தோனேசியப் பெண்ணுக்கு நேற்று (மே 30) எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 23 அன்று இந்த சம்பவம் நடந்தது, பின்னர் நான்கு மணி நேரத்திற்குள் ரஹீமா கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அந்த குழந்தை பிறந்தது.
ரஹிமா வசிக்கும் பாடாமில் திருமணம் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர்க்கு 6 ஆண்டுகள் சிறை