சிங்கப்பூர் வந்த இருவர்… மாறி மாறி சண்டையிட்டு கொண்ட வீடியோ வைரல் – வளைத்து பிடித்த அதிகாரிகள்

motorcycle-helmet-fight
TikTok/@itsirwan

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் இருவர் பிடிபட்டனர்.

சண்டையில் ஈடுபட்ட இருவரை பிடித்த அதிகாரிகள், அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளதாக ICA கூறியுள்ளது.

அவர்களுக்கு வயது 32 மற்றும் 47 என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் தலைக்கவசத்தை வைத்து சண்டையிட்டு கொண்டதை காணொளி மூலம் நம்மால் காணமுடிகிறது.

சிங்கப்பூருக்கு வரும்வழியில் இந்த சண்டை நடந்தாகவும் நம்பப்படுகிறது. சாலை ஓரத்தில் அடித்துக்கொண்ட அவர்கள் பின்னர் சாலை நடுவிலும் சண்டையில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக நடந்துகொண்டால் ஒரு ஆண்டு சிறை அல்லது $5000 அபராதம் இல்லையெனில் இரண்டுமே விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் மிகவும் அரிதான நிகழ்வு… கட்டுமான தளத்தை சிதறடித்த “landspout” என்னும் சூறாவளி – Viral Video

Work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது – விசாரணையில் 48 பெண்கள்