உட்லண்ட்ஸ் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) ஏற்பட்ட விபத்தில் 4 நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 2 கார்கள், சைக்கிள் மற்றும் பாதசாரி ஒருவர் சம்மந்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் 25 வயதுமிக்க பாதசாரி மற்றும் மூன்று பயணிகள் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் 50 முதல் 75 வயதுக்குட்பட்ட ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 6 மற்றும் 7 சந்திப்பில் அன்று மாலை 6.30 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF கூறியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்