சிங்கப்பூரில் பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் தூங்கியதை அடுத்து பேருந்து மோதி விபத்துக்குள்ளானது, இதில் மூன்று பயணிகள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், 42 வயதான ஷிஃபுதீன் பின் ஹுசின் என்ற அந்த பேருந்து ஓட்டுநருக்கு 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பூனையை சுற்றுவளைத்த பெரிய மலைப்பாம்பு – நெரித்து கொன்ற காட்சி வைரல்
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வாகனங்களையும் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து கடந்த ஜூன் 8, 2021 அன்று நடந்தது, அதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டுநர் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்கியதாக சொல்லப்படுகிறது.
அன்று பிற்பகல் 2:47 மணியளவில், ஷிஃபுதீன் தனது பேருந்தை யிஷூன் ஸ்ட்ரீட் 31 அருகே ஓட்டிச் சென்றபோது, அவர் தூங்கியுள்ளார்.
அப்போது தடம்மாறிய வண்டி, பேருந்து நிறுத்தத்தின் முன் இருந்த சிமென்ட் கற்களில் மோதியது. விபத்து ஏற்படும் போது பேருந்தில் 10 பயணிகள் இருந்தனர்.
இதில் மூன்று பயணிகள் காயமடைந்தனர். இருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
விளக்கு கம்பத்தில் மோதிய கார்… போஸ்டே வளைந்து போச்சு – Drive Safely