ஜீ தமிழில் புதுமையான ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோ!

Photo: ZEE Tamil Video Crap

 

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க ஆப்பிரிக்கா நாட்டில் தனித்தீவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!

இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 16 போட்டியாளர்களின் பெயர்களை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புதிய நிகழ்ச்சி தொடர்பான ப்ரோமோவையும் தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் அனைவருமே ஒரு காட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியானது இன்று (13/09/2021) இரவு 09.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. போட்டியாளர்கள் தனித்தீவில் தொலைபேசி உள்ளிட்ட எவ்வித நவீன வசதிகளும் இன்றி பழங்கால ஆதிவாசிகளைப் போல் 90 நாட்கள் அங்கு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. உணவு மற்றும் இருப்பிடத்தை போட்டியாளர்களே அமைத்துக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூபாய் 1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் மூடல்

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்தும் கட் எடிட் செய்த பின் தான் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியானது எந்தவித கட் எடிட் இல்லாமல் அப்படியே ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட, இந்நிகழ்ச்சியை அதிக பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அடங்கியிருப்பதாக தகவல் கூறுகின்றன.