கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை போட்டி தொடரின்போது போட்டி நடந்த மைதானத்தை ஜப்பானிய ரசிகர்கள் சுத்தம் செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
இதில் குறிப்பிடவேண்டிய ஒருவிடயம் என்னவென்றால் அந்த போட்டியில் அவர்களது அணி விளையாடவில்லை.
மெல்லும் புகையிலை, சிகரெட் பறிமுதல் – வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு
ஜப்பானின் தேசிய கோடி வண்ணத்தை அணிந்திருந்த ஜப்பானிய ரசிகர்கள், உணவுப் பொதிகள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை பையில் எடுத்துப்போட்டு சுத்தம் செய்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் தரையில் கிடந்த கத்தார் மற்றும் ஈக்வடார் கொடி வண்ணங்களை எடுத்தும் அதற்கு மரியாதையை செலுத்தினர்.
இந்த பொதுநல செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க S$32,500 லஞ்சம்… சிக்கிய போலீஸ் அதிகாரி