கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த “Pocari Sweat 2.4km challenge” ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த போட்டி நேற்று சனிக்கிழமை (ஜன. 8) நடைபெற்றது.
இந்த போட்டியில், 24 வயதான கூர்க்கா சுபாஸ் குருங் உட்பட சிங்கப்பூரின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்கள் சிலர் பங்கேற்றனர்.
திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!
இந்நிலையில், சிங்கப்பூரர்கள் மூன்று பேர் இந்த போட்டியில் 7 நிமிட எல்லையை கடந்தனர்.
அதில் ஜீவனேஷ் சௌந்தரராஜா, அதிகாரபூர்வமாக 6 நிமிடம் 52 வினாடிகளில் எல்லையை கடந்து அசத்தினார்.
மேலும், குருங் 6 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தையும், மற்றொரு சிங்கப்பூரரான சோஹ் 6 நிமிடம் 55 வினாடிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் 2.4km sub-seven நேர எல்லையை கடக்கும் சிங்கப்பூரருக்கு Pocari Sweat event பரிசுகளை வழங்குகிறது.