சிங்கப்பூரில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா உறுதி!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (27/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (27/11/2021) மதியம் நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,752 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சமூக அளவில் 1,689 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 63 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,61,636 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சிங்கப்பூருக்கு வருகிறார்!

கொரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 55 முதல் 82 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 199 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 79 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளை!

கடந்த நாளில் 1,897 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 329 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.