சிங்கப்பூரில் மார்ச் முதல் ஜூலை இறுதி வரை, சுமார் 24,000 வேலை தேடுபவர்கள் SGUnited வேலைப் பயிற்சித் திட்டங்கள் அல்லது திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலோர் குறுகிய கால வேலைகளில் 12 மாதங்கள் வரை ஒப்பந்த காலத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் நான்கு தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று குழுமம் பட்டியலில் இருந்து நீக்கம்..!
- குறுகிய கால நிபுணர்கள், மேலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப (PMET) வேலைகள்: 5,200
- குறுகிய கால PMET அல்லாத வேலைகள்: 8,600
- நீண்ட கால PMET வேலைகள்: 4,600
- நீண்ட கால PMET அல்லாத வேலைகள்: 5,200
இது நான்காவது பட்ஜெட்டின் போது மே மாதம் அறிவிக்கப்பட்டது. S$2 பில்லியன் மதிப்புள்ள இந்த திட்டத்தில், SGUnited வேலைகள் மற்றும் திறன்கள் தொகுப்பில் 100,000 வேலை வாய்ப்புகள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் அல்லது திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொத்தம் 92,000 வேலை வாய்ப்புகளில், 24,000 வேலை வாய்ப்புகள் வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்படும் என்று திருமதி தியோ செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சிங்கப்பூரின் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த வாராந்தர அறிக்கையை வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் அமைச்சகம் வெளியிடும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வேலையின்மை விகிதம் 90 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவானதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஆள்குறைப்பு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,700க்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!