சிங்கப்பூரில் புதிதாக 32 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 345ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!
குணமடைந்தோர்
மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.
தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக உள்ளது.
மருத்துவமனையில் உள்ளோர்
மருத்துவமனையில் இன்னும் 221 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மேலும், 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!
புதிய சம்பவங்கள்
புதிய சம்பவங்களில், 24 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
வெளிநாடுகளிலிருந்து இருந்து சிங்கப்பூர் வந்த அனைவரும், குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 பேருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் புதிய சம்பவங்களில் 2 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil