நான்கு லாரி, இரண்டு கனரக டிரக் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி கொண்ட விபத்தில் 28 வயதுடைய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆடவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த அக்.16ஆம் தேதி அன்று தான் திருமணம் நடந்துள்ளது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே அவர் மெக்கானிக்காக பணிபுரிந்தார் என்று ஷின் மின் நியூஸ் தெரிவித்துள்ளது.
சுமார் எட்டு முதல் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் நேற்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள வந்ததாக அவரது மைத்துனர் கூறினார்.
இந்த சம்பவம் உட்லண்ட்ஸ் சாலை மற்றும் மாண்டாய் எஸ்டேட் சந்திப்பில் நேற்று முன்தினம் டிச.16 அன்று மதியம் 12:05 மணியளவில் நடந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் இன்னொரு லாரி ஓட்டுநரும் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 54 வயதான டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.