நான்கு லாரி, 2 டிரக் மோதி கடும் விபத்து: சம்பவ இடத்திலேயே 28 வயதுமிக்க ஆடவர் மரணம் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

4 lorry include 7-vehicle-collision
Photos: Telegram/@SgRoad

நான்கு லாரி, இரண்டு கனரக டிரக் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி கொண்ட விபத்தில் 28 வயதுடைய ஆடவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் உட்லண்ட்ஸ் சாலை மற்றும் மாண்டாய் எஸ்டேட் சந்திப்பில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்

நேற்று (டிச.16) மதியம் 12.05 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இன்னொரு லாரி ஓட்டுநர் ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தகவல் அறிந்து அங்குவந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தினர.

ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் 22 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் போலீசார் தெரிவித்தனர்.

மற்ற இரு ஓட்டுனர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 54 வயதான டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

மசாஜ் நிலையங்களில் அந்த மாறி சேவை: பிடிபட்ட 3 பெண்கள் – உரிமம் இல்லாமல் செயல்பட்ட நிறுவனங்கள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்