மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சிறை!

சிங்கப்பூரை சேர்ந்த 41 வயதான சவுண்ட் டெக்னீசியன் (Sound Technician), தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2013- ஆம் ஆண்டு தனது மகள் 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2015- ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விடுமுறை நாட்களில், தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை கட்டாயப்படுத்தினார்.

அதேபோல், கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் 13 வயதைக் கடந்த தனது மகளை, அவரது அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து, சிறுமி தனது மூத்த சகோதரரிடம் தனது தந்தை தன்னுடன் தகாத முறையில் நடந்துக் கொண்டது குறித்து கூறினார். இருப்பினும், அந்த சிறுமி தனது தந்தை தகாத முறையில் நடந்துக் கொண்டது குறித்து தாயிடம் சொல்லவில்லை.

சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் குறித்த முழுமையான தகவல்!

கடந்த 2018- ஆம் ஆண்டு, ஒருநாள் இரவு, அவரது மனைவி மதுபானங்களைக் குடித்துவிட்டு தனது அறையில் உறங்கியுள்ளார். அப்போது, வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது 16 வயது மகனை தாயின் அறைக்கு செல்லுமாறும், பாலியல் வன்கொடுமை செய்யுமாறும் தூண்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபரின் மகன், முதலில் மறுத்துவிட்டார். பின்னர், தந்தையின் கடுமையான அறிவுறுத்தலால், அதற்கு இணங்கினார்.

சிறுவன் சில நிமிடங்களுக்குப் பிறகு தாயின் அறையை விட்டு வெளியேறினான், அவனது தாய்க்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கோயில் தீமிதித் திருவிழா 2021- இரண்டாம் கட்ட முன்பதிவுகள் தொடங்கியது!

இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனக்கு நேர்ந்த கொடுமைப் பற்றி தனது அத்தையிடம் கூற, அவர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தையை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்பு, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இவ்வழக்கு நேற்று (04/10/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, 13 குற்றச்சாட்டுகளும், 284 ஆபாச படங்களை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும், அந்த நபர் மீது முன் வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ரொக்கமில்லா கட்டணச் சேவைகளின் பயன்பாடு கணிசமாக உயர்வு!

குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றத்துக்காகவும், குடிபோதையில் இருந்த தனது மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ய தனது மகனைத் தூண்டியக் குற்றத்துக்காகவும் 41 வயதுடைய அந்த கொடூர நபருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 24 பிரம்படியும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.