சிங்கப்பூரில் 422 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 5 பேர் பாதிப்பு..!

422 new Covid-19 cases in S'pore, including 5 in community
422 new Covid-19 cases in S'pore, including 5 in community

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 11) நிலவரப்படி, புதிதாக 422 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 39,387ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

இதில் 5 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!