தெம்பனீஸில் நடந்த சண்டையில் ஆயுதத்தால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது..!

50-year-old man arrested over Tampines slashing incident
50-year-old man arrested over Tampines slashing incident

தெம்பனீஸில் உள்ள HDB வீட்டில் நடந்த சண்டையில் ஒருவரை ஆயுதத்தை வைத்து வெட்டிய சந்தேகத்தின் பேரில் 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 21 அன்று, தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 11இல் உள்ள ஒரு HDB நடைபாதையில் நடந்த இந்த சண்டை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக புதன்கிழமை (ஜூலை 22) செய்தி வெளியீட்டில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் வலது தொடையில் காயங்கள் காணப்பட்டதாகவும், பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் சிறிய கத்தியால் அவர் வெட்டப்பட்டிருப்பதாகவும், அவரும் சந்தேக நபரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை சந்தேகநபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் அவர் சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg