COVID-19: சிங்கப்பூரில் மேலும் 517 பேர் பாதிப்பு – 15 பேர் சமூக அளவில் பாதிப்பு..!

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 4) நிலவரப்படி, புதிதாக 517 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 36,922ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் மேலும் 2 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

இதில் 15 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் மற்றும் 13 பேர் வேலை அனுமதி பெற்றவர்கள்.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறிய 3 வேலையிடங்கள் மூட உத்தரவு – MOM..!