சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் மேலும் 2 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 407 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 23,582 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறிய 3 வேலையிடங்கள் மூட உத்தரவு – MOM..!

மேலும் 334 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,465 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் 2 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • 12 Kwong Min Road
  • 8 Tuas South Lane

இதையும் படிங்க : தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள் குறித்த பட்டியல் வெளியீடு – இந்திய தூதரகம்..!