இஸ்ரேலில் இருந்து தென் கொரிய இராணுவ விமானம் மூலம் 6 சிங்கப்பூரர்கள் மீட்பு

6 S'poreans evacuated from Israel

இஸ்ரேலில் இருந்து ஆறு சிங்கப்பூரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் தென் கொரிய இராணுவ விமானம் மூலம் நேற்று அக். 14 அன்று மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து சுமார் 220 பேரை அந்த இராணுவ விமானம் ஏற்றி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை கியோங்கி மாகாணத்தில் உள்ள சியோல் விமான தளத்திற்கு அவர்கள் வந்ததாக தி கொரியன் ஹெரால்டு நியூஸ் தெரிவித்துள்ளது.

அந்த 220 பேரில் ஆறு சிங்கப்பூரர்கள், 51 பேர் ஜப்பானியர்கள், 163 பேர் தென் கொரியர்கள் அடங்குவர் என்றும் அது கூறியது.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்