ராபர்ட்சன் கீ பகுதியில் COVID-19 “சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கைகளில் விதிமுறைகளை மீறி சிக்கிய 6 பேரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இனி அவர்களுக்கு நிரந்தரமாக வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய 12 இடங்கள் வெளியீடு..!
முன்னதாக ராபர்ட்சன் கீ பகுதியில் கூட்டங்களை நடத்தியதற்காகவும் ஏழு பேருக்கு வியாழக்கிழமை (ஜூன் 25) அபராதம் விதிக்கப்பட்டது.
COVID-19 விதிமுறைகளை மீறிய ஏழு பேரும் நியாயமான காரணமின்றி ஒருவருக்கொருவர் சந்தித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்களுக்கு S$8,000 முதல் S$9,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மே 1ஆம் தேதி முதல் ஜூன் 25 வரை, சுமார் 140 பேரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக MOM குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் பாசிர் ரிஸில், ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோசமான விபத்து..!