சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 3) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,114ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதி முதல் பெரும்பாலான வேலையிடங்கள் மூடல் – பிரதமர் லீ..!
மருத்துவமனையில் உள்ளோர்
மருத்துவமனையில் இன்னும் 473 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.
மேலும், 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
401 நபர்கள் மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
புதிய சம்பவங்கள்
புதிய சம்பவங்களில், 9 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மேலும் 39 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.
17 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 3) ஒருவர் உயிரிழந்தார், இதுவரை மொத்தம் ஐந்து பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : COVID-19 தொற்று: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் மரணம்..!