சிங்கப்பூரில் புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

897 new Covid-19 cases in Singapore, taking total to 12,075
897 new Covid-19 cases in Singapore, taking total to 12,075

சிங்கப்பூரில் நண்பகல் (ஏப்ரல் 24) நிலவரப்படி, புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,075ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 85 பேர் திரும்பினர்..!

புதிய சம்பவங்களில், 13 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 982 பேர் பாதிப்பு..!