அப்பர் செரங்கூன் ரோட்டில் 95 வயதான பெண் ஒருவர், ஒரு குடியிருப்பு பிரிவில் இறந்து (ஜூலை 6) கிடந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 1.50 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
இதனை தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் தொடர்பில், 34 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணும் மற்றும் சந்தேக நபர் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் மீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த எதிர்கட்சி கருத்துக்கு மனிதவள அமைச்சர் விளக்கம்.!
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter – https://twitter.com/tamilmicsetsg
??Telegram – https://t.me/tamilmicsetsg
?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg