கொரோனா காலத்தில் வீட்டில் தங்கியிருக்கும் தனிமைப்படுத்தப்படும் அரசின் கட்டாய உத்தரவை மீறிய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் தங்கியிருந்த, பொஜங்கி சுரேஷ் நாயுடு (37 வயது) மற்றும் பாரதி துல்ஷிராம் செளத்ரி (வயது 48) ஆகிய இருவரும் கட்டுப்பாட்டை மீறி ஒரே அறையில் நேரம் செலவிட்டதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலையிடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு – அலுவலகங்களுக்குத் திரும்பும் ஊழியர்கள்
இருவரிடமிருந்தும் தாெற்றுப் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மேலும், சுரேஷுக்குத் தீர்ப்பளிக்கும்போது முகக்கவசம் அணியாமல் இருந்த ஒரு குற்றச்சாட்டையும் கருத்தில் கொண்டு இருவருக்கும் 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இருவரும் ஒரே விமானத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.