சிங்கப்பூரில் இரவு நேரத்தில் கைவிடப்பட்ட குழந்தை கண்டுபிடிப்பு – காவல்துறை விசாரணை..!

Baby boy found at Tai Keng Gardens at night, police investigating
Baby boy found at Tai Keng Gardens at night, police investigating (Photo: Pixabay)

அப்பர் பாயா லேபார் ரோட்டிற்கு அருகிலுள்ள 7 Tai Keng Gardens-இல் கடந்த திங்கள்கிழமை இரவு ஆண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அன்று இரவு 7.45 மணியளவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த ஆண் குழந்தையை கண்டுபிடித்தது குறித்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வரியைக் குறைத்து செலுத்தி வந்த நிறுவனத்திற்கு அபராதம்..!

மேலும், கண்டறியப்பட்ட அந்த குழந்தைக்கு எந்தவிதமான காயங்களும் இல்லை என்றும், குழந்தையின் உடல்நிலை சீராக இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களும் இருந்தனர், பின்னர் அந்த குழந்தையை கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg