பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்

bedok-north-fire-victims details

சிங்கப்பூரில் Block 409 Bedok North Avenue 2ல் அமைந்துள்ள HDB அடுக்குமாடி வீட்டின் நான்காவது மாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த பெண்மணி 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் லாரியில் கடத்தப்பட்ட நாய்கள் – கடத்தலின் பின்னணி என்ன?

மேலும், 35 வயதுடைய ஆண் மற்றும் மூன்று வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 34 வயதான பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இறந்த ஆண், காயமடைந்த பெண் மற்றும் இறந்த சிறுமி ஆகியோர் வாடகைக்கு இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஒரே குடும்பம் என்றும் சீன ஊடகமான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிகிச்சை பலனின்றி மரணம்

35 வயதுடைய ஆண், 34 வயதுடைய பெண் மற்றும் சிறுமி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தனர்.

இதில் படுகாயமடைந்த ஆணும், சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் கூடத்தில் கண்டெடுக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயங்கர தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவனையில்…

‘வீடியோவை அனுப்புங்கள்…. 10,000 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்கள், பரிசுகளை வெல்லுங்கள்’- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘MWC’ அழைப்பு!