சிங்கப்பூர் Boat Quay-ல் ஏற்பட்ட சண்டை….8 பேர் கைது!

Man arrested kallang road

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் Boat Quay-ல் ஏற்பட்ட சண்டை குறித்து தகவல் கிடைத்ததாக, நேற்று (டிசம்பர் 16) செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெயர் கூறப்படாத கிளப் ஒன்றில் எட்டு பேர் கொண்ட குழு மற்றொரு குழுவினரால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீயின் உள்ளூர் விடுப்பு குறித்த அறிவிப்பு!

இதில் 40 வயதான ஒருவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

விசாரணைகள் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராவில் உதவியுடனும், மத்திய காவல்துறை பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 8 பேரை அடையாளம் கண்டு கடந்த டிசம்பர் 14 அன்று கைது செய்தனர்.

அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 8 பேரும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள் என்றும், தகராறு காரணமாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…