பாசிர் ரிஸில் உள்ள வேகவைத்த பண் கடையில் ஆயுதத்தை காட்டி கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படும் 15 வயது சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் எலியாஸ் மாலில் அமைந்துள்ள பாவ் பேபி என்ற கடையில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்
கடையின் உள்ளே சிறுவன் ஆயுதத்துடன் நுழைந்தபோது 56 வயது பெண் உரிமையாளர் உதவி வேண்டி அழுதுள்ளார்.
அப்போது அந்த சிறுவன் அவர் மீது கத்தியை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பெண்ணின் நெஞ்சுப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சிறுவன் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்