நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் குளிக்க சென்ற ஆடவர் மரணம்

Body retrieved waters Changi Point Ferry Terminal
Police

சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.10) அன்று கண்டெடுக்கப்பட்டது.

அவரை தேடும் மற்றும் மீட்கும் பணி சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

சம்பவ இடத்துக்கு அருகே அமைந்துள்ள காபி கடையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்திவிட்டு பின்னர் நீச்சலடிக்க சென்றதாக பார்த்தவர்கள் கூறினர்.

அவர் நீரில் குதிப்பதற்கு முன்பு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்றவர் மீண்டும் வராததால், அங்கிருந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தின் அருகே அவரது செருப்புகள் மற்றும் பீர் கேன்கள் காணப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சதிச் செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறினர்.

சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் நீரில் இறந்து கிடந்த ஆடவர் – அருகில் செருப்பு, பீர் கேன் கண்டெடுப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் வெடித்த போராட்டம் – நிறுவனத்தை கலைத்து செட்டில்மென்ட் செய்ய முடிவு