தோ பாயோவில் (Toa Payoh) மெதடிஸ்ட் தேவாலயத்தின் (TPMC) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு பரிசுப் பைகள் மற்றும் வவுச்சர்களை அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, தோ பாயோ சமூகத்தில் உள்ள அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வழங்கும் நோக்கில் தேவாலயம், சமய மன்றத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதிபர் குறிப்பிட்டார்.
3ஆம் கட்டத்தில், வெளிநாட்டு ஊழியருக்கான கட்டுப்பாடுகள் ஏன் தளர்த்தவில்லை ? – அமைச்சர் டான் விளக்கம்!
இந்த ஆண்டு, வசதி குறைந்த குடும்பங்களுக்கும், மழலையர் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன, இது மகிழ்ச்சி அளிப்பதாக திருவாட்டி. ஹலிமா கூறினார்.
மேலும், இந்த ஆண்டு சமூகத்தை ஆதரிப்பதில் TPMC, Toa Payoh Central CC மற்றும் Toa Payoh East CC ஆகியவை மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சி!