கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி: சிங்கப்பூருடனான அனைத்து விமானங்களையும் நிறுத்திய வளைகுடா நாடு..!

Coronavirus: Kuwait suspends all flights with Singapore, Japan over virus fears
Coronavirus: Kuwait suspends all flights with Singapore, Japan over virus fears (PHOTO: REUTERS)

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடனான அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது என்று மாநில செய்தி நிறுவனம் Kuna தெரிவித்துள்ளது.

குவைத் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; தனது PR தகுதியை இழந்த ஆடவர்..!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவிவரும் காரணத்தால் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் கடந்த திங்கள்கிழமை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் நிறுத்தியது.

முன்னதாக, ஈராக் நாட்டிற்கு அனைத்து விமானங்களையும் DGCA நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

COVID-19 நோய்த்தொற்றுகள் பரவுவதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக DGCA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19; மேலும் இரண்டு புதிய நபர்களை உறுதிசெய்த சிங்கப்பூர்..!