COVID-19: சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 673 பேர் பாதிப்பு..!

(Photo: NYTimes)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 17) நிலவரப்படி, புதிதாக 682 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 28,038ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் கொலை சம்பவம்: 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் 4 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிய சம்பவங்களில் சமூக அளவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் 99 சதவீதம், முன்பு அறியப்பட்ட நோய் குழுமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 998 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 9,340 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 900-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்..!