சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 26) நிலவரப்படி, புதிதாக 481 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது, அதாவது அந்த எண்ணிக்கை 50,369ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர்-மலேசியா எல்லை தாண்டிய பயண ஏற்பாடுகள் உறுதி – தினசரி பயணத்திற்கு இன்னும் தயாராகவில்லை..!
புதிய சம்பவங்களில், சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்தபின் தனிமையில் வைக்கப்பட்டனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!