சிங்கப்பூரில் புதிதாக 31 பேருக்கு தொற்று – சமூக அளவில் 24 பேர் பாதிப்பு

Photo by Fiona Tan

சிங்கப்பூரில் இன்று, புதிதாக 31 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,100ஆக உள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானங்கள் தாமதம் – பயணிகள் கடும் அவதி

உள்நாட்டில், சமூக அளவில் 24 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் 19 பேருக்கு முன்பு தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையது.

மேலும், புதிய பாதிப்புகளில் 5 பேருக்கு இன்னும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

அவர்களில், 18 பேர் முன்பே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 7 பேர் இந்த புதிய பாதிப்புகளில் அடங்குவர், அவர்கள் ஏற்கனவே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டனர் அல்லது சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் (PR) என்றும் அது கூறியுள்ளது.

“சிங்கப்பூர் திரும்புவோருக்கு COVID-19 நெகட்டிவ் சான்று இருப்பதை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு”