COVID-19 பரவல் காரணமாக உலக நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதால் ஸ்கூட் 49 இடங்களுக்கு தன்னுடைய விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மற்றும் சீனா இடையே ஸ்கூட் விமான சேவை பாதிக்கப்பட்ட வழித்தடங்களை பட்டியலிட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 138 SIA மற்றும் சில்க் ஏர் விமான சேவைகள் நிறுத்தம்..!
மேலும் ஆசியாவிற்கு வெளியே, கிரீஸ் மற்றும் ஜெர்மனிக்கும் இதன் சேவை பாதிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
சில வழித்தடங்களுக்கான சேவை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) முதல் ரத்து செய்யப்பட்டது.
ஸ்கூட்டின் 49 விமானங்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தையும் நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி..!