கடை முன்னே ஒன்றுகூடிய பொதுமக்கள்.. கடையை தற்காலிகமாக மூட உத்தரவு!

Orchard Gateway @ Emeraldஇல் உள்ள ஃபுட் லாக்கர் (Foot Locker) கடை, COVID-19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறியதற்காக 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) மற்றும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) ஆகியவை கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் முன்பதிவுகள் தொடக்கம்!

ஃபுட் லாக்கர் கடைக்கு வெளியே நேற்று முன்தினம் இரவு மக்கள் ஒன்று திரண்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு காலணி மற்றும் துணி கடைக்கு வெளியே கூடியிருந்த பெரிய கூட்டத்தின் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன.

கூட்டம் மேலாண்மை குறித்து பொது அமலாக்க நிறுவனம் பலமுறை ஆலோசனை வழங்கிய போதிலும், டிசம்பர் 4ஆம் தேதி பொருள் அறிமுகத்திற்காக பெரிய மக்கள் கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தற்காலிக தடை டிசம்பர் 14 வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், ஃபுட் லாக்கர் கடையின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.

ஆனால், ஆன்லைனில் தொடர்ந்து தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…