சிங்கப்பூரில் சம்பளம் வேண்டி Zhengda கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்த 10 வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த அக்டோபர் 18, 2022 அன்று போராட்டம் நடத்தினர்.
தற்போது, அவர்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் TADM முத்தரப்புக் கூட்டணி உதவி செய்து வருகிறது.
10 ஊழியர்களில் ஐந்து பேருக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் MOM முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அந்த ஐந்து ஊழியர்களுக்கும் அவர்களின் சம்பளம் கிடைக்க உதவி செய்துள்ளோம் என்றும், மேலும் Zhengda கார்ப்பரேஷன் அவர்களின் முழுமையான சம்பளத்தை செலுத்தியுள்ளதாகவும் MOM கூறியது.
மற்ற ஐந்து ஊழியர்கள் உட்பட அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இதுவரை எந்த புகார்களையும் மற்ற ஊழியர்கள் தெரிவிக்கவில்லை என்பதையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
18 முதல் 49 வயதுடையவர்கள் ரெடியா.. உங்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி
“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்