திருமணமாகி 75 ஆண்டு பொன்விழா கொண்டாடும் தம்பதிக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திரு மற்றும் திருமதி Sng தம்பதிக்கு திருமணமாகி 75 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக குறிப்பிட்ட அதிபர், அவர்களுக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
MRT ரயில் இருக்கையில் கோழி எலும்புகள், பயன்படுத்தப்பட்ட காகிதம்… இணையவாசிகள் காட்டம்!
99 மற்றும் 92 வயதுடைய திரு மற்றும் திருமதி Sng தம்பதி இந்த சிறப்பான திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட கஷ்டங்கள் உட்பட, அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை ஒன்றாக எதிர்கொண்டனர் என்று அதிபர் ஹலிமா பெருமிதம் கொண்டார்.
இன்று, அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணத்தில் ஒருவருக்கொருவர் உறுதியுடன், ஒருவருக்கொருவர் ஆதரவளித்தும், கடினமான காலங்களை ஒன்றாகத் துணிச்சலுடனும் சாமாளித்த அவர்கள் ஒரு முன்மாதிரி என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பொன்விழா கொண்டாடும் தம்பதிகள் அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை அதிபர் ஹலிமா தெரிவித்து கொண்டார்.
கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதி விபத்து! (காணொளி)
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பு!
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…