சிங்கப்பூரில் லாரி, டாக்ஸி மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!

Lorry driver killed, 3 others injured in Yio Chu Kang Road accident
Lorry driver killed, 3 others injured in Yio Chu Kang Road accident (PHOTO: FACEBOOK/ TAXIUNCLE)

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்ரல் 21) லாரி, டாக்ஸி மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

பிலிப்ஸ் அவென்யூ, யியோ சூ காங் ரோடு (Yio Chu Kang Road) மற்றும் செரங்கூன் நார்த் அவென்யூ 1 சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு அன்று இரவு 9.07 மணிக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம், மருத்துவ வசதிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படும் – அமைச்சர் சண்முகம்..!

இதில் 58 வயதான லாரி ஓட்டுநர் சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் ஒரு துணை மருத்துவரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்தனர்.

Video Credit: Straits Times

இதில் மூன்று பேர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு அடைந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எட்டு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சகம்..!