சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சமூக ஊடகங்களில் விமான சேவை குறித்து இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
COVID-19 கிருமித்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!
கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 4 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி அதனை மேற்கொண்டும் வருகிறது. COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சிங்கப்பூரிலிருந்து சிறப்பு ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ AI381 விமானம் 234 பயணிகளுடன் கடந்த மே 8ஆம் தேதி காலை டெல்லி புறப்பட்டு சென்றது. அதே போல் மும்பை, கொச்சி மற்றும் பெங்களூருக்கும் விமானங்கள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டன.
Sir Kindly keep us Singaporean Tamilians in mind and arrange a Flight from SG to Trichy . Pregnant Ladies 32 weeks + , Senior citizens with Medical Emergencies, Tourists and student visa are awaiting. Kindly do the needful its been over 2 months +,Thanks.
— Mathew R Raaj (@RaajMathew) May 21, 2020
@PWilsonDMK @KanimozhiDMK @mkstalin @nakkheeranweb @DrSenthil_MDRD
Sir, still don't know when we #TamilNadu people will evacuate from #Singapore to #trichy & #Chennai Pld HELP https://t.co/M7BxuqmChQ pic.twitter.com/CjXRbu8FCu— Rama (@TSG68120) May 21, 2020
இந்நிலையில் தமிழகத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் விமானம் இயக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தமிழர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுவது போல் தமிழகத்திற்கும் வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தும் வருகிறது. விரைவில் விமான சேவை எதிர்பார்ப்பதாக தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Kindly Take Note TN Govt #TNGovt #MEA #DCA #HCISG #cmotamilnadu #sumanthraman #DrSJaishankar #Jawedashraf5 #SunNews #polimertv #ZeeNews #NDTVNewsBeeps #Dhinathanthinews #AIDMK pic.twitter.com/RFNSc2MkIl
— Mathew R Raaj (@RaajMathew) May 21, 2020
@CMOTamilNadu @Vijayabaskarofl @polimernews @sunnewstamil @news7tamil @News18TamilNadu @PTTVOnlineNews @ThandhiTV @bbctamil @ikamalhaasan @SeemanOfficial @mkstalin @Dayanidhi_Maran @draramadoss @iVijayakant @TTVDhinakaran @sathiyamnews#NoFlightFromSingaporeToTamilnadu https://t.co/DzVZpdIqp4
— Jayaprakash K (@seafarerjp) May 21, 2020
@CMOTamilNadu ஐயா, சிங்கப்பூரில் இருந்த டெல்லி, மும்பை, பெங்களூர், கேரளா, ஐதராபாத் மக்கள் வீடு திரும்பி விட்டனர். ஆனால் தமிழ் மக்கள் மட்டும் விமானம் இன்றி தவிக்கின்றனர். உடனடியாக திருச்சி & சென்னைக்கு மீட்பு விமானங்களை ஏற்பாடு செய்து உதவுங்கள்#NoFlightfromSingaporeToTamilnadu
— Jayaprakash K (@seafarerjp) May 21, 2020
@CMOTamilNadu ஐயா, சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவுங்கள். கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குடும்ப உறுப்பினர் இழப்பு, வேலையின்மை, விசா ரத்து, மாணவர்கள் சிங்கப்பூரில் சிக்கித் தவிப்பவர்களில் அடங்குவர். திருச்சி, சென்னைக்கு விமானத்தை ஏற்பாடு செய்யுங்கள்.
— Jayaprakash K (@seafarerjp) May 21, 2020
can TN Govt prevent Indians coming in to India ?
I appeal to @DrSJaishankar to find out a solution to bring stranded Indians from UAE, Singapore , Newzealand & other countries immediately to their home town at least Enroute through states which allows Landing. They’re suffering
— P. Wilson (பி. வில்சன்) Believe in Yourself. (@PWilsonDMK) May 21, 2020
இது பற்றி High Commissioner ஜாவெத் அஷ்ரப் கூறுகையில், தொடர்ந்து தமிழகத்திற்கு விமானங்களைக் கேட்டு வருவதாகவும், ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறது என்றும், ஜூன் முதல் வாரத்தில் அதை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
We continue to ask for flights to Tamil Nadu. Gov waiting for consent of TN Gov. Hoping for it in first week of June.
— Jawed Ashraf (@JawedAshraf5) May 23, 2020
இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாக மாற்றப்பட உள்ள இரண்டு முன்னாள் பள்ளி வளாகங்கள்..!