சிங்கப்பூரில், 95 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த 34 வயதான சந்தர் ஹ்தூ (Sandar Htoo), அப்பர் செரங்கூன் ரோட்டுக்கு அருகிலுள்ள Recreation ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவில், ஆங் பெக் சாயை ( Ang Pek Chai) என்ற மூதாட்டியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தொடர்பில்லாத COVID-19 சமூக அளவிலான சம்பவங்களில் பாதி, கட்டுமானத் துறையைச் சேர்ந்தவை..!
நேற்று முன்தினம் மதியம் 1.50 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணை நடந்து வருகிறது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும்.
அவர் கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையை அவர் எதிர்கொள்ளக்கூடும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!