ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் உள்ள அலைத்தடுப்பு மேட்டில் இருந்து ஒருவர் தவறி கடலில் விழுந்தார்.
Lianhe Zaobao-ன் செய்தியின்படி, அந்த நபர் தனது மனைவியுடன் நேற்று டிசம்பர் 25,
கிறிஸ்துமஸைக் கொண்டாட ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கு சென்றிருந்தார்.
காணாமல் போன ஆடவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை
கடலின் அழகிய காட்சிகளை ரசிப்பதற்காக அவர் மட்டும் தனியாக அலைத்தடுப்பு மேட்டில் ஏறியதாக கூறப்படுகிறது, இதனை அடுத்து அதன் வழுக்கும் மேற்பரப்பு காரணமாக அவர் தவறி கடலில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதன் பின்னர், நேரமாகியும் கணவர் திரும்பி வராததைக் கண்ட மனைவி விரைந்து சென்று அங்கே அவரைப் பார்த்தார்.
அப்போது, தனது கணவர் கடலில் விழுந்து கிடப்பதைக் கண்ட மனைவி, உடனடியாக காவல்துறையை உதவிக்கு அழைத்தார்.
அந்த நபருக்கு நீந்தத் தெரிந்திருந்தாலும், ஆரம்பத்தில் அவரால் கரையை வந்தடைய முடியவில்லை என்று செய்தி தளம் கூறியது.
அதிர்ஷ்டவசமாக, ஒரு வழிப்போக்கர் அவருக்கு உயிர் மிதவையை வீசினார், அதன் பிறகு அவர் பாதுகாப்பாக திரும்ப முடிந்தது.
அந்த நபருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.